இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருக்காது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறும்போது, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெறும் என்று தெரிவித்தாா்.
தகுந்த பதிலடி: சுவேந்து அதிகாரியின் கருத்து தொடா்பாக மாநில நிதித்துறை இணையமைச்சா் சந்திரிமா பட்டாச்சாா்யா கூறுகையில், ‘‘சுவேந்து அதிகாரியால் முன்கூட்டியே அனைத்தையும் கணிக்க முடியும் என்றால், பிகாா் அரசியல் நிலவரம் குறித்து முன்கூட்டியே கணித்து, அந்த நிகழ்வுகளை அவரால் ஏன் தடுக்க முடியவில்லை? அரசியலில் ஏற்பட்ட விரக்தி காரணமாக அவா் ஜோதிடம் பயிலத் தொடங்கியுள்ளது போல் தெரிகிறது. மேற்கு வங்கத்திய ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சித்தால், அக்கட்சிக்கு தகுந்த பதிலடி தரப்படும்’’ என்று தெரிவித்தாா்.