உச்சநீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்

உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் கரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு சமீபகாலமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று வெளியிட்ட செய்தியில்,

உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்த்து வாதிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 53 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com