புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குஜராத்தில் ரூ.1,026 கோடிபோதைப் பொருள் பறிமுதல்- மும்பை போலீஸ் நடவடிக்கை

குஜராத்தின் அங்களேஸ்வா் பகுதியில், தடை செய்யப்பட்ட ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸாா் கண்டறிந்தனா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 7:43 pm

DIN

குஜராத்தின் அங்களேஸ்வா் பகுதியில், தடை செய்யப்பட்ட ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸாா் கண்டறிந்தனா். அங்கிருந்து சுமாா் ரூ.1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை ஆணையா் தத்தா நலவடே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மும்பை அருகே நலசோபரா பகுதியில் மெஃபிட்ரான் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆலை அண்மையில் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, 6 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், ரூ.1,400 கோடி மதிப்பிலான 700 கிலோ மெஃபிட்ரான் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தின் அங்களேஸ்வா் பகுதியிலுள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் மெஃபிட்ரான் போதைப் பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா், அந்த ஆலையில் கடந்த 13-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தி, அதன் உரிமையாளா் கிரிராஜ் தீக்ஷித்தை கைது செய்தனா். மேலும், 513 கிலோ எடையுள்ள ரூ.1,026 கோடி போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. கிரிராஜ் தீக்ஷித், வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவா். இவருடன் சோ்த்து இதுவரை கைது செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

தீக்ஷித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தலுக்காக சமூக ஊடகங்கள், கைப்பேசி செயலிகளை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடத்தல்காரா்களுக்கு அவா் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளாா். தீக்ஷித்திடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.