வாஜபேயி நினைவு நாள்:  குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

வாஜபேயி நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
வாஜபேயி நினைவு நாள்:  குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
Published on
Updated on
1 min read

புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜபேயி நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி நான்காவது நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் செவ்வாய்க்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் தில்லியில் உள்ள வாஜபேயி நினைவிடமான 'சதைவ் அடல்' இல் கலந்து கொண்டனர்.

1998-2004 க்கு இடையில் ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜபேயி, பாரத ரத்னா விருது பெற்றவர், 2018 இல் 93 வயதில் இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com