தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெளதம் அதானி
கெளதம் அதானி
Published on
Updated on
1 min read

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் 4ஆவது பெரும் பணக்காரரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அச்சுறுத்தல் வந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படை கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செய்யப்படும் செலவு அதானியிடம் பெறப்படும் எனத் தெரிகிறது.  ஏற்கெனவே ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com