நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

News image

ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

Updated On :19 ஆகஸ்ட் 2022, 4:18 pm IST

புது தில்லி: 1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

ஆனால், 2022ஆம் ஆண்டுகளில் மனிதர்களின் பெரும்பாலான நேரத்தை இணையதளங்களே விழுங்கி விடுகின்றன. ஊர் என்ன,நாடு, நாடு கடந்து உலகம் என பல விஷயங்களையும் மக்கள் இன்டர்நெட் மூலமே அறிந்து கொள்கிறார்கள்.

இணையதளம் வாயிலாகவே பலரும் தங்கள் கருத்துகள், விருப்பம், விமரிசனம் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். சரி, நமது நாட்டில் அவ்வாறு அதிகம் ஊர் வம்பு பேசுவதில் எந்த மாநிலங்கள் முதல் இடத்தில் இருக்கிறது என்றால்..

ஷேர்சுட் எனப்படும் செயலி, நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் அதிகம்பேர் பல தலைப்புகளில் அதிகம் சேட் செய்வதாகவும், தொடர்ந்து மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழகம், பிறகு மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

கன்னட மொழியில் ஏராளமானோர், பல தலைப்புகளில் கலந்துரையாடுவதும், இதுபோன்ற சட்ரூம்களுக்கு நடிகர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.