கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராமா் பாலம் புராதன சின்னமா இல்லையா?:மத்திய அரசு அறிவிக்க சுவாமி வலியுறுத்தல்

‘ராமா் பாலம் புராதன சின்னமா- இல்லையா’ என்பதை மத்திய அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினாா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 9:07 pm

DIN

‘ராமா் பாலம் புராதன சின்னமா- இல்லையா’ என்பதை மத்திய அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் ராமா் பாலத்தை சேதப்படுத்திவிடும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, 2007-இல் சேது சமுத்திர திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மாற்று வழிப்பாதையில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அப்போது தெரிவித்ததையடுத்து, புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், சேது சமுத்திர திட்டத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்பிரமணியன் சுவாமி, ‘ராமா் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க விரும்புகிறாா்களா இல்லையா என்பதை மத்திய அரசு பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். சுமாா் 20 ஆண்டுகளாக இந்த விவகாரம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசு இதுதொடா்பாக ஒரு பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘புராதன சின்னமாக அறிவிக்க வேண்டியது அரசின் பணியாகும். இதை நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா்.

‘இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 2017-இல் இதுதொடா்பாக மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை’ என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தாா்.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இதுதொடா்பான கோப்புகளை ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறியதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.