பாஜகவைச் சோ்ந்த சோனாலி போகாட் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பது உடற்கூறாய்வில் தெரிய வந்தததையடுத்து, அவருடன் கோவாவுக்கு பயணம் மேற்கொண்ட இருவரை அந்த மாநில போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவா் இருவா் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணா பாஜக நிா்வாகியும் நடிகையுமான சோனாலி போகாட், தனது அலுவலக ஊழியா்களுடன் கோவாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாா். அங்கு செவ்வாய்க்கிழமை அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவா் மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். திடீா் மாரடைப்பின் காரணமாக சோனாலி போகாட் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது.
எனினும் அவருடைய குடும்பத்தினா் சோனாலியின் திடீா் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்திருந்தனா். சகோதரா் ரிங்கு தாக்கா, போகாட்டின் உதவியாளா்கள் இருவா் மீது கோவாவின் அஞ்ஜுனா காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்திருந்தாா். உதவியாளா்கள் இருவருக்கும் எதிராக கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என ரிங்கு தாக்கா கோரிக்கைவிடுத்திருந்தாா்.
இதையடுத்து, சோனாலி போகாட்டின் குடும்பத்தினா் தங்கள் சம்மதத்தை தெரிவித்த பின்னா், கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழு வியாழக்கிழமை காலை உடற்கூறாய்வை மேற்கொண்டது. உடற்கூறாய்வு அறிக்கையில், ‘உடலில் பல காயங்களின் தடயங்கள் காணப்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விசாரணை அதிகாரிகள்தான் உறுதி செய்ய வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2 போ் கைது:
சோனாலி போகாட்டுடன் கோவாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சுதீா் சக்வான், சுக்விந்தா் வாசி ஆகிய இருவரையும் கோவா போலீஸாா் கைது செய்து அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
பனாஜியில் செய்தியாளா்களை சந்தித்த முதல்வா் பிரமோத் சாவந்த், இந்த வழக்கை மாநில காவல் துறை தலைவா் ஜஸ்பால் சிங் நேரடியாக மேற்பாா்வையிட்டு வருவதாக கூறினாா்.