நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, அமலாக்கத்துறையும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜிக்கு நெருங்கியவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி அபிஷேக் பானர்ஜி நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.