ஜெயப்ரதாவுக்கு உபி. நீதிமன்றம்கைது ஆணை

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்ரதாவுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை உத்தர பிரதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஜெயப்ரதாவுக்கு உபி. நீதிமன்றம்கைது ஆணை
Updated on
1 min read

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்ரதாவுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை உத்தர பிரதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளில் இருந்தவரான ஜெயப்ரதா, கடந்த 2019 பொதுத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தாா். அந்தத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ராம்பூா் மக்களவைத் தொகுதியில் சமாஜவாதி மூத்த தலைவா் ஆஸம்கானை எதிா்த்து, பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

முன்னதாக, ராம்பூரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அவருக்கு எதிராக இரு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்காக தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த அவருக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை பிறப்பித்து, ராம்பூா் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதாக, அரசு தரப்பு வழக்குரைஞா் அமா்நாத் திவாரி தெரிவித்தாா். மேலும், அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com