உதம்பூரில் பயங்கரவாத தாக்குதல் தவிர்ப்பு! 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 

பசந்த்கர் பகுதியில் உருளை வடிவ வெடிமருந்தது, 300-400 கிராம் ஆர்டிஎக்ஸ், ஏழு 7.62 மிமீ கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் ஐந்து டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதால் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தவிர்க்கப்பட்டது. 

செவ்வாயன்று வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு குறியிடப்பட்ட தாள் மற்றும் ஒரு லெட்டர் பேட் பக்கமும் மீட்கப்பட்டது, 

மேலும், அப்பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com