ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பசந்த்கர் பகுதியில் உருளை வடிவ வெடிமருந்தது, 300-400 கிராம் ஆர்டிஎக்ஸ், ஏழு 7.62 மிமீ கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் ஐந்து டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதால் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தவிர்க்கப்பட்டது.
செவ்வாயன்று வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு குறியிடப்பட்ட தாள் மற்றும் ஒரு லெட்டர் பேட் பக்கமும் மீட்கப்பட்டது,
மேலும், அப்பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.