அஸ்ஸாம்-தாம்பரம் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் முதல் தாம்பரம் வரை ஜன.5-ஆம் தேதி முதல் சிறப்பு கட்டண ரயிலுக்கு புதன்கிழமை (டிச.28) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் முதல் தாம்பரம் வரை ஜன.5-ஆம் தேதி முதல் சிறப்பு கட்டண ரயிலுக்கு புதன்கிழமை (டிச.28) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் முதல் தாம்பரம் வரை ஜன.5, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (வண்டி எண்.05924) இயக்கப்படவுள்ளது. திப்ருகரில் வியாழக்கிழமை இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக ஜன.12, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.05923) இயக்கப்படவுள்ளது. தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் வழியாக சனிக்கிழமை இரவு 8.50 மணிக்கு அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் சென்றடையும்.

இதற்கான பயணச்சீட்டுக்கு புதன்கிழமை (டிச.28) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com