தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

இந்திய மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்திய தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலியாகியுள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 டிசம்பர் 2022, 0:40 pm IST

இந்திய தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலியாகியுள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன், உஸ்பெகிஸ்தான் மருத்துவமனைகளில் இருமலுக்கு மருந்து குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக 21 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அதில், 18 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளது.

இதுகுறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த மருந்தை குடித்துள்ளனர்.

2-7 நாள்கள் வரை தினமும் 3 முறை 2.5 முதல் 5 மி. வரை இந்த மருந்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கக்கூடும்.

மேலும், இந்த மருந்துகளை ஆய்வு செய்ததில், எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், உஸ்பெகிஸ்தான் முழுவதும் மருந்து விற்பனையகத்திலிருந்து டாக்-1 மேக்ஸ் மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்களை குடித்த 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக புகார் எழுந்த நிலையில், மெய்டென் மருந்தியல் நிறுவனத்தின் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.