புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,192 பேர் பலி

நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.67 லட்சமாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.

News image

நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,192 பேர் பலி

Updated On :1 பிப்ரவரி 2022, 5:27 am

DIN


புது தில்லி: நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.67 லட்சமாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,
நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,192 பேர் பலியானதைத் தொடர்ந்து, கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,96,242 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 88 ஆயிரம் அளவுக்குக் குறைந்து இன்று காலை நிலவரப்படி 17,43,059 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.20 சதவீதமாகும்.  நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமானது 94.60 சதவீதமாக உள்ளது.

நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது 11.69 ஆகவும், வாராந்திர விகிதம் 15.25 சதவீதமாகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.