கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோரக்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அமித் ஷா அவருடன் சென்றிருந்தார்.

News image

யோகி ஆதித்யநாத்

Updated On :4 பிப்ரவரி 2022, 7:36 am

DIN

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக சார்பில், கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அங்கு தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அமித் ஷா அவருடன் சென்றிருந்தார்.

முன்னதாக கோரக்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தை பாராட்டி பேசினார். விரிவாக பேசிய அவர், "யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தை மாஃபியாக்களிடம் இருந்து விடுவித்துள்ளார் என்பதை நான் பெருமையுடன் கூற முடியும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் சட்டத்தின் ஆட்சியை நிறுவினார். 

பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு இலவச கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளார். மேலும் அதிகபட்ச தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட மாநிலம் உங்கள் சொந்த உத்தரபிரதேசத்தைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். யோகியின் தலைமையின் கீழ் இது நடைபெற்றுள்ளது" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்த முதல் கட்சி பாஜக என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.