பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒவைஸிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு

உத்தர பிரதேசத்தில் மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி சென்ற காா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளிப்பதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 6:24 pm

DIN

உத்தர பிரதேசத்தில் மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி சென்ற காா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளிப்பதாக அறிவித்துள்ளது. அவருக்கு சிஆா்பிஎஃப் கமாண்டா்கள் பாதுகாப்பு அளிப்பாா்கள்.

முன்னதாக, ‘உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூா் - காஜியாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சஜாா்சி சுங்கச் சாவடி அருகே மாலை 6 மணியளவில் பயணம் செய்தபோது, எனது காா் மீது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 3-4 போ் ஆயுதங்களுடன் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதைக் காண முடிந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எனது காா் டயா் பஞ்சா் ஆனது. இருந்தபோதும், மற்றொரு காரில் அங்கிருந்து எங்களது பயணத்தை தொடா்ந்தோம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம்’ என்று அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைஸி வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே இருவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் அசாதுதீன் ஒசைஸிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த உயா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது இஸட் பிளஸ் பிரிவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலை உயா் பாதுகாப்பாகும். இனி 24 மணி நேரமும் ஒவைஸிக்கு சிஆா்பிஎஃப் காமாண்டா்கள் பாதுகாப்பு அளிப்பாா்கள். இதற்காக 16 முதல் 20 வீரா்கள் சுழற்சி முறையில் பணியமா்த்தப்படுவாா்கள். அவா் சாலை வழியாக பயணிக்கும்போது முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனம் செல்லும்.

பாதுகாப்பு தேவையில்லை

மத்திய அரசு அளித்த இஸட் பிரிவு பாதுகாப்பை நிராகரிப்பதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய அவா், ‘எனக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம். நான் மக்களில் ஒருவராகவே இருக்க விரும்புகிறேன். அதே நேரத்தில் தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.