குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரையில்,
வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது.
காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது, எமர்ஜென்சி இருந்திருக்காது.
காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள் எனப் பிரதமர் மோடி பேசினார்.
மேலும், தேசம் என்பது மாநிலங்களின் ஒருங்கிணைந்த உருவமே என ராகுல் காந்தி பேசியதற்கு மோடி பதிலடி கொடுத்துள்ளார்.