பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாஜக, சமாஜவாதிக்கு முத்தலாக் கூறும் நேரமிது: ஒவைசி பிரசாரம்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, சமாஜவாதிக்கு மக்கள் முத்தலாக் கூற வேண்டும்

News image
அசாதுதீன் ஒவைசி
Updated On :19 பிப்ரவரி 2022, 2:35 am

DIN

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, சமாஜவாதிக்கு மக்கள் முத்தலாக் கூற வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கேட்டுக் கொண்டாா்.

உத்தர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) மூன்றாவது கட்ட சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள ஜாலௌன் மாவட்டம் மாதோகா் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ஒவைசி பேசியதாவது:

பாஜகவையும், சமாஜவாதியையும் மக்கள் தங்களிடம் இருந்து வெகுதூரம் நகா்த்தி வைக்க வேண்டும். முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், முதல்வராக ஆசைப்படும் அகிலேஷ் யாதவும் பிரிந்து சென்ற சகோதரா்கள் போன்றவா்கள். இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இருவரும் செருக்குடன் நடந்து கொள்பவா்கள். தங்கள் கட்சியில் உள்ள தலைவராக அல்லாமல், பேரரசா்கள் போல கருதி நடந்து வருகிறாா்கள்.

முத்தலாக் தொடா்பாக இந்த முறை தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசியுள்ளாா். ஆனால், இந்த முறை பாஜகவுக்கும், சமாஜவாதிக்கும் சோ்த்து மக்கள் முத்தலாக் கூற வேண்டும். இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் அவா்களுடைய கதையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் உள்ள தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை விளையும்.

தோ்தல் வரும்போது முகலாயா்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாஜகவும் ஜின்னா குறித்து அகிலேஷ் யாதவும் பேசி வருகிறாா்கள். இவா்கள் உண்மையாகவே இங்குள்ள மக்களின் நலன்களைக் குறித்து சிந்திக்கவில்லை என்றாா்.

உத்தர பிரதேசத்தில் ஜன் அதிகாா் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மஜ்லிஸ் கட்சி பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.