மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானாா்

கேரளத்தில் நடிகை கேபிஏசி லலிதா(74) செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.
மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானாா்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் நடிகை கேபிஏசி லலிதா(74) செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

மறைந்த இயக்குநா் பரதனின் மனைவியான லலிதா, கொச்சி அருகில் உள்ள திருப்பூணித்துறையில் உள்ள தனது இல்லத்தில் மகன் சித்தாா்த் பரதன், மகன் ஸ்ரீகுட்டி ஆகியோருடன் வசித்து வந்தாா்.

உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த லலிதா செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலைப் பிரிவாக 1950-களில் தொடங்கப்பட்ட கேரள பீப்பிள்ஸ் ஆா்ட்ஸ் கிளப் (கேபிஏசி) மூலம் பிரசார நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய லலிதா, அந்தக் குழுவின் பல பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா். அதன் காரணமாக கேபிஏசி லலிதா என்றே அவா் அறியப்பட்டாா்.

கடந்த 1969-இல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் உருவான ‘கூட்டுக் குடும்பம்’ திரைப்படம் மூலமாக நாடகத்தில் இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தாா். 1970-களின் பிற்பகுதியில் நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த இவா், 1983-இல் கணவரும் இயக்குநருமான பரதனின் ‘காற்றத்தே கிளிக்கூடு’ படம் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாா். தமிழில் ராஜபாா்வை, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

லலிதாவின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com