தில்லியில் விசா காலாவதியான 6 நைஜீரியர்கள் கைது

விசா காலாவதியான ஆறு நைஜீரிய பிரஜைகள் தேசிய தலைநகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 
தில்லியில் விசா காலாவதியான 6 நைஜீரியர்கள் கைது
Published on
Updated on
1 min read

விசா காலாவதியான ஆறு நைஜீரிய பிரஜைகள் தேசிய தலைநகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

அதிகாரியின் கூற்றுப்படி கைதானவர்கள் பீட்டர் நவாபுசி, மைக்கேல் சௌக்மேகா, நச்சேர், பிராங்க் உச்சே ஒகேக்சுக்வு, பீட்டர் எலுமுனோ, ஒகாபோர், ஒபானா கிறிஸ்டியன் மற்றும் செலஸ்டின் கிறிஸ்டியன் ஆவார். அடையாளம் காணப்பட்ட 6 பேர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து நாடு கடத்தப்பட்டனர். 

அவர்களின் சான்றுகளை சரிபார்த்த பிறகு அவர்கள் சரியான விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அசல் பாஸ்போர்ட்டுகளுடன் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. 

தேசிய தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சில ஆப்பிரிக்க பிரஜைகள் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் தொடர்ந்து காவல்துறையிடம் சிக்குகின்றனர் என்றும் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்டது.

உள்ளூர் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததற்காக அவர்கள் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, சைபர் மோசடி தொடர்பான சில வழக்குகள் ஆப்பிரிக்க நாட்டினரும் தொடர்பு பட்டுள்ளன என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், ஆறு ஆப்பிரிக்க பிரஜைகளும் லம்பூர் எல்லையில் உள்ள தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com