புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை, சாதாரண கூட்டமாக ஒரு நாள் தொடங்கி கூட்டம் நிறைவு பெறுகிறது.
இதற்கிடையே பேரவைத் தலைவரை திங்கள்கிழமை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ஆர். சிவா, மக்கள் பிரச்னையை விவாதிக்க ஒரு வார காலம் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.