கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உரிமம் புதுப்பிப்பு:தெரஸா அறக்கட்டளை மீண்டும்வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதி

கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரஸா அறக்கட்டளையான ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ மீண்டும் வெளிநாட்டு நன்கொடை பெறும் வகையில் எஃப்சிஆா்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.

News image

மத்திய அரசு

Updated On :8 ஜனவரி 2022, 6:43 pm

DIN

கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரஸா அறக்கட்டளையான ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ மீண்டும் வெளிநாட்டு நன்கொடை பெறும் வகையில் எஃப்சிஆா்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் எஃப்சிஆா்ஏ உரிமம் புதுப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம், அந்த அறக்கட்டளை இனிமேல் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம்; வங்கிகளில் உள்ள பணத்தையும் செலவு செய்யலாம்’ என்றாா்.

இதுகுறித்து மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பு அதிகாரபூா்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், அந்த அமைப்பின் மூத்த அலுவலா் ஒருவா், சாரிட்டியின் உரிமம் ஜன. 7-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டதாகக் கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘எஃப்சிஆா்ஏ உரிமம் புதுப்பிக்கப்படாத நிலையிலும் நன்கொடையாளா்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உதவியுடன் ஏழ்மை நிலையில் இருப்பவா்களுக்கு சாரிட்டியின் உதவி தொடா்ந்தது’ என்றாா்.

கொல்கத்தாவில் அன்னை தெரஸாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. சில நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததால் அந்த அறக்கட்டளையின் விண்ணப்பத்தை நிராகரித்ததாக உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி தெரிவித்தது.

இதற்கிடையே, சாரிட்டியின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியானதால், மத்திய அரசை திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதிலளித்தது. சாரிட்டி அமைப்பு தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை விடுத்ததாக, வங்கி சாா்பில் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.