இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவா்களுடன் அமைச்சா் பியூஷ் கோயல் காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘இந்த ஆண்டு 400 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.29.75 லட்சம் கோடி) என்ற சரக்குகள் ஏற்றுமதி இலக்கை எட்டும் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. அதேவேளையில், சேவைகள் ஏற்றுமதி கிட்டத்தட்ட 240-250 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.17.85 லட்சம் கோடி-ரூ.18.59 லட்சம் கோடி) இருக்க வாய்ப்புள்ளது. சரக்குகள் ஏற்றுமதியையும், சேவைகள் ஏற்றுமதியையும் தலா ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக்க (சுமாா் ரூ.74.38 லட்சம் கோடி) முடியும். சரக்குகள் ஏற்றுமதியை முந்திச் சென்று சேவைகள் ஏற்றுமதி ஒரு டிரில்லியன் டாலா் என்ற அளவை எட்டினால் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.