தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

கல்லூரி முதல்வரை தாக்கிய பேராசிரியர்...வெளியான பரபரப்பு விடியோ

காயப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது என பல்வேறு பிரிவுகளின் கீழ் துணை பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

கல்லூரி முதல்வரை தாக்கிய பேராசிரியர்

Updated On :19 ஜனவரி 2022, 3:08 pm IST

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வரை அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவருபவர் தாக்கியுள்ளார். பேராசிரியர் பாயந்து சென்று தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

காயப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் துணை பேராசிரியர் பிரதீப் அலௌன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உஜ்ஜைனியில் உள்ள நாகுலால் மாளவியா அரசு கல்லூரியில் இவர் பணிபுரிந்துவருகிறார்.

இந்த சம்பவம் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்த விடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலான பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபாலிலிருந்து உஜ்ஜைனி கல்லூரிக்கு இவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் விரிவாக பேசுகையில், "நாங்கள் ஏற்கனவே குறைந்த பணியாளர்களை வைத்துள்ளோம். ஜனவரி 15ம் தேதி கல்லூரி தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டது. இதைப் பற்றி பேச நான் அவரை அழைத்தேன், ஆனால் அவர் கோபமடைந்து என்னைத் திட்டவும், குத்தவும் தொடங்கினார்" என்றார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள துணை பேராசிரியர், "மேடம்வார் பதவியில் இருந்த காலத்தில், மூன்று பேர் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர். அவர் அனைத்து ஊழியர்களிடமும் தவறாக நடந்து கொள்கிறார். அவர் என்னை தனது அறைக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது" என்றார்.

கல்லூரி முதல்வர் அறையிலிருந்து கிடைத்த சிசிடிவி விடியோவில், இருவரும் வாக்குவாதம் மேற்கொள்வது போன்றும், ஒரு கட்டத்தில் கையை காட்டி  பேராசிரியரை வெளியே செல்லும்படி முதல்வர் உத்தரவிடுவது போலவும் பதிவாகியுள்ளது.

இறுதியாக, எதிரில் அமர்ந்திருந்த பேராசிரியர் பாய்ந்து சென்று முதல்வரை தாக்குவது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெளியில் இருந்த ஐந்து பேர், சத்தம் கேட்டு, அறைக்குள் வந்து இருவரையும் சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.