கட்டுப்பாடுகள் தளர்வு: தில்லி முதல்வரின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்!
தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரிய முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.


தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரிய முதல்வரின் பரிந்துரையை துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக தலைநகர் தில்லியில் இரவு நேர ஊரடங்கு, தனியார் நிறுவனங்கள் 100% வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது தில்லியில் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கை கைவிடுவதுடன் வார இறுதி நாள்களிலும் வணிக வளாகங்கள் திறக்கப்படவும் தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால், அந்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். இரவு நேர ஊரடங்கு முடிவை நிராகரித்த ஆளுநர், தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நேற்று, தில்லியில் கரோனா பலி 43 ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...