நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

87 குற்றவாளிகளின் பட்டியலை பிகாரிடம் அளித்த உ.பி. காவல்துறை

பிகாரில் தேடப்பட்டு வந்த 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உத்தரப் பிரதேச காவல்துறை ஒப்படைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2022, 4:51 pm IST

பிகாரில் தேடப்பட்டு வந்த 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உத்தரப் பிரதேச காவல்துறை ஒப்படைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் எஸ்.பி மற்றும்  ஏ.எஸ்.பி.,களுக்கு பிகார் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய் சிங் உத்தரவிட்டார். 

இதையடுத்து, தீவிர நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் விளைவாக 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உ.பி.காவல்துறை பிகாரிடம் ஒப்படைத்துள்ளது. 

அதிகபட்ச குற்றவாளிகள் பிகாரின் பாகல்பூர் மற்றும் கோசி மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள். தவிர, சில குற்றவாளிகள் சிவான், கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரன், பக்சர், ரோஹ்தாஸ், கைமூர், போஜ்பூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற கொடூரமான குற்றங்களின் கீழ் உத்தரப் பிரதேச மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.