பாட்னா நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடிப்பு: காவலர் காயம்

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

பிகார் மாநிலம், பாட்னா பல்கலைக்கழகத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com