மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாட்னா நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடிப்பு: காவலர் காயம்

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜூலை 2022, 10:53 am

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

பிகார் மாநிலம், பாட்னா பல்கலைக்கழகத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.