நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

News image
Updated On :1 ஜூலை 2022, 7:50 am

IANS

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலையாளிகளான கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகியோர் கொலையின் விடியோவை பதிவேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) பயங்கரவாத எதிர்ப்புப் படை(ஏடிஎஸ்) மற்றும் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் ஆதரவுடன் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர்புடைய கூட்டாளியான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். 

இந்த வழக்கை என்ஐஏ மேலும் விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.