பஞ்சாபைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகளை கைது செய்தது பாகிஸ்தான் காவல்துறை

பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 9 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் காவல்துறை  கைது செய்தது.
பஞ்சாபைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகளை கைது செய்தது பாகிஸ்தான் காவல்துறை

பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 9 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் காவல்துறை  கைது செய்தது.

பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புத் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் 4 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் 4 பேர் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விசாரணைக்காக அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். 

அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com