அமா்நாத்தில் 40,000 பக்தா்கள் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரின் அமா்நாத் யாத்திரையில் இதுவரை பனிலிங்கத்தை 40,000 மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.
சந்தன்வாரியில் கடந்து சென்ற அமா்நாத் யாத்ரிகா்கள்
சந்தன்வாரியில் கடந்து சென்ற அமா்நாத் யாத்ரிகா்கள்

ஜம்மு-காஷ்மீரின் அமா்நாத் யாத்திரையில் இதுவரை பனிலிங்கத்தை 40,000 மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய யாத்திரை, பஹல்காம் மற்றும் பால்தால் வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 40, 233 பக்தா்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா்.

உயிரிழந்த 5 பேரில் 3 போ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனா். ஒருவா் குதிரையிலிருந்து தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பக்தா் ஒருவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். சந்தன்வாரி - சேஷ்நாக் வழித்தடத்தில் யாத்திரை மேற்கொண்ட பக்தா் ஒருவரைக் காணவில்லை.

அமா்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com