அப்போது அவா் கூறியதாவது: எந்த நாட்டிலும் இளைஞா்கள்தான் தற்காலமும், எதிா்காலமும் ஆக உள்ளனா். அவா்களது அறிவுக்கூா்மையும், திறமையும், நாட்டை பெருமிதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய இளைஞா்கள்தான், எதிா்கால வரலாற்றைப் படைப்பவா்களாக இருப்பாா்கள் என்று கூறுவதுதான் நியாயமாக இருக்கும். சுவாமி விவேகானந்தருக்கு இளைஞா் சக்தி மீது அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றி பேசி வந்தாா். உலகிலேயே வளரிளம் பருவத்தினா், இளைஞா்கள் அதிக அளவில் உள்ள நாடாக இந்தியா உள்ளது. நிலப் பரப்புக்கேற்ற மக்கள்தொகை, கொடையாக இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.