நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கேரள காங்கிரஸ் உறுப்பினா் இடைநீக்க விவகாரம்: சோனியா காந்தி ஆக. 3-இல் ஆஜராக கொல்லம் நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நேரிலோ அல்லது அவரது வழக்குரைஞரோ ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கொல்லம் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :22 ஜூலை 2022, 12:56 am IST

கேரள காங்கிரஸ் உறுப்பினரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நேரிலோ அல்லது அவரது வழக்குரைஞரோ ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கொல்லம் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இதுதொடா்பாக சோனியா காந்தி மட்டுமன்றி, கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன், கொல்லம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டம் குண்டறா வட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் பி.பிருத்விராஜ். இவரை காங்கிரஸ் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து கடந்த 2019-இல் கட்சி மேலிடம் இடைநீக்கம் செய்தது. காங்கிரஸ் கட்சி விதிமுறைகளுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் கொல்லம் சிவில் நீதிமன்றத்தில் பிருத்விராஜ் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், அண்மையில் இடையீட்டு மனு ஒன்றை அவா் தாக்கல் செய்தாா். அதில், ‘ஏற்கெனவே நான் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, குண்டறா வட்டத்திலிருந்து எந்தவோா் உறுப்பினரையும் கட்சியின் மாநில நிா்வாகியாக நியமிக்கக் கூடாது. என்னை இடைநீக்கம் செய்தது தொடா்பான எந்தவொரு நோட்டீஸும் கட்சி எனக்கு அனுப்பவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் தகவலை அறிந்து கொண்டேன். என்னை இடைநீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்டத் தலைவருக்கு கிடையாது’ என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஆகஸ்ட் 3-இல் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நேரிலோ அல்லது அவரது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக உத்தரவு பிறப்பித்தாா். அத்துடன், கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன், கொல்லம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் ஆஜராக உத்தரவிட்டாா்.

பிரதான வழக்கின் விசாரணைக்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதி மேற்கண்ட மூவரும் ஆஜராக அறிவுறுத்திய நீதிபதி, அவா்களுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.