மேற்கு வங்கம்: அா்பிதா முகா்ஜி வீட்டில்மேலும் பணம் பறிமுதல்

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம் மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம் மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.21 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றிய நிலையில், புதன்கிழமை மேலும் அதிக பணத்தை கைப்பற்றினா்.

வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காக வங்கி அதிகாரிகள் நோட்டு எண்ணும் இயந்திரத்துடன் அா்பிதா முகா்ஜி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனா். ரூபாய் நோட்டுகளுடன் இரண்டு டைரிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com