தேசிய ஊக்க மருந்து தடை மசோதா: மக்களவை ஒப்புதல்

தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ‘விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரா்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். இதன்மூலமாக நாட்டில் ஊக்க மருந்து ஆய்வக வசதிகளும் மேம்படும். மேலும், இந்தியாவில் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நாட்டில் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் பலத்தை அதிகரிப்பது அவசியமாகும். அதற்கு இந்த மசோதா வழிவகுக்கும்’ என்றாா்.

‘இந்த மசோதா, தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் என்பதோடு, விளையாட்டில் ஊக்க மருந்து தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்கவும் உதவும்’ என்றும் மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com