போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

நாடாளுமன்றத்தில் பாஜக - காங்கிரஸ் அமளி: பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:03 am

DIN

நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியவுடன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

அதேபோல், மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மாறிமாறி முழக்கம் எழுப்பியதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.