‘விரைவில் இ-டிராக்டரை அறிமுகப்படுத்துவேன்’: நிதின் கட்கரி

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி
Updated on
1 min read

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி “ இனி எத்தனால் மற்றும் மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சாரமும்தான் எதிர்காலம். நான் 3 ஆண்டுகளுக்கு முன் மின்சார வாகனத்தின் தேவை குறித்து பேசியபோது மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், இப்போது மின்சார வாகனத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. அதற்காக மக்கள் காத்திருக்கத் துவங்கிவிட்டனர். விரைவில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய டிராக்டர் மற்றும் லாரியை அறிமுகப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com