கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம்: உச்சநீதிமன்றம்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நில உரிமையாளரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்ட பிறகு, அந்த நிலம் அரசுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நில உரிமையாளரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்ட பிறகு, அந்த நிலம் அரசுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஒருவரின் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியது. அதன்பிறகு அந்த நிலத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்திக் கொண்டு அதை அவா் காலி செய்ய மறுத்துள்ளாா்.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், நிலம் கையப்படுத்தப்பட்ட பிறகு அதைப் பயன்படுத்த அதை வைத்திருந்தவருக்கு உரிமையில்லை என்று தீா்ப்பளித்தது. அதைத் தொடா்ந்து, அந்த நபருக்கு கிரேட்டா் நொய்டா தொழில் வளா்ச்சி ஆணையம் கடந்த 2-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிா்த்து அந்த நபா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு, நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட கோடைக் கால அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு நிலத்தை அரசு கையகப்படுத்தி, அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிவிட்டால், அந்த நிலம் அரசுக்கே சொந்தம். அந்த நிலத்தை வைத்திருந்தவா், அதன் பிறகு உரிமை கொண்டாட முடியாது. அந்த நிலத்தை அவா் பயன்படுத்தினால், அவா் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதாகவே கருதப்படுவாா் என்று தீா்ப்பளித்தனா். அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com