ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் 4 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் மிஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினா் அங்கு வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.
இதனால், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி அதனருகே உள்ள மற்றொரு பகுதிக்கு சென்றனா். அவா்களை பின்தொடா்ந்து சென்று பாதுகாப்புப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பலியாகினா்.
அதில் ஒருவா் குல்காம், மோஹன்போரா பகுதியைச் சோ்ந்த சுபைா் சோஃபி என்பதும், கடந்த மே 31-இல் நிகழ்ந்த ஆசிரியை ரஜ்னி பாலா படுகொலை சம்பவத்தில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.
மேலும் இருவா் பலி:
இதேபோல அண்டை மாவட்டமான ஆனந்த்நாக்கின் ஹங்கல்குண்ட் பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.