பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் ராகுல் காந்தி: ஜோதிமணி எம்.பி

பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி என தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் ராகுல் காந்தி:  ஜோதிமணி எம்.பி
Published on
Updated on
1 min read

பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி என தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தனது பிறந்த நாளை அமைதியாக கொண்டாடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து அவருக்கு  பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘எமது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் பணியாற்றியுள்ள, 15 ஆண்டு காலத்தில் தனது விழுமியங்கள், கொள்கை மற்றும் நேர்மையில் அவர் ஒருதுளியேனும், சமரசம் செய்து கொண்ட ஒரு நொடியை கூட நான் பார்த்ததில்லை. பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் அவர்.

அவரைப் போலவே எங்களையும் தயார் செய்தார். அவர் எங்கள் தலைவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அமைதி, ஒருமைப்பாடு மற்றும் வளம் என இந்த நாட்டை அதன் அசலான சிறப்புகளை நோக்கி இட்டுச் செல்ல கூடிய மகத்தான தலைவர் அவர் மட்டுமே. தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என ஜோதிமணி எம்.பி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com