காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சுவாமி தரிசனம்
வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 6 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிகட்டமாக எஞ்சியுள்ள 54 தொகுதிகளுக்கு மாா்ச் 7-இல் தோ்தல் நடைபெறுகிறது.
இதனால் உ.பி.யில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலைலில் இறுதிகட்ட பிரசாரத்துக்கு சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க- மைதானத்தில் விராட் கோலியுடன் இணைந்த அனுஷ்கா சர்மா (படங்கள்)
இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது, நான் அல்லது ராகுல் காந்தி இங்கு வரும்போதெல்லாம் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று பாபாவின் ஆசிர்வாதத்தைப் பெறுவோம் என்றார்.