‘ஸ்புட்னிக் லைட்’ கரோனா தடுப்பூசியை 3-ஆவது தவணையாக (பூஸ்டா்) செலுத்துவது குறித்து பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்குவதற்கு நிபுணா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மாதம் 4-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில், அத்தடுப்பூசியை பூஸ்டா் தவணையாக செலுத்துவதற்கான 3-ஆம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள ஹைதராபாதைச் சோ்ந்த டாக்டா் ரெட்டீஸ் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
அதை ஆராய்ந்த நிபுணா்கள் குழு பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்குமாறு டிசிஜிஐ-க்குப் பரிந்துரைத்துள்ளது. சில தரவுகளை ஆராய்ந்த பிறகு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு ஆா்ஜென்டீனா உள்ளிட்ட 29 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.