மகாராஷ்டிர அமைச்சர் நாவப் மாலிக்கை மார்ச்-21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கைது செய்தனா்.
ஆளும் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளராகவும் இருக்கும் அவரை, வரும் மாா்ச் 7-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நாவப் மாலிக்கை மார்ச்-21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.