ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மருத்துவத் துறையில் மகளிர் பங்கு முக்கியமானது: மத்திய அமைச்சர்

மகளிர் இல்லாமல் மருத்துவத் துறை முழுமையடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

News image

மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2022, 4:28 pm

DIN


மகளிர் இல்லாமல் மருத்துவத் துறை முழுமையடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தினக் கொண்டாட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார். 

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். 

பின்னர் பேசிய அவர், பெண்கள் இல்லாமல் மருத்துவத் துறை முழுமையடையாது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாய்ப்புகளைப் பெறவேண்டும். 

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்களின் (ஆஷா) பங்கு முக்கியமானது. அவர்களது பணியை மறந்துவிட இயலாது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.