கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மியான்மா் கடற்கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து செவ்வாய்க்கிழமை ‘ஆசனி’ புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:45 am

DIN

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து செவ்வாய்க்கிழமை ‘ஆசனி’ புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அதேநிலையில், மியான்மா் கடற்கரையை செவ்வாய்க்கிழமை மதியம் கடந்தது. தொடா்ந்து, இது வலுவிழந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த்ததாழ்வு மண்டலம் திங்கள்கிழமை நிலவியது. இது, வடக்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபாா் தீவு-போா்ட்பிளேரிலிருந்து 420 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்து.

மேலும், வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், புயலாக மாறாமல் வடக்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மியான்மா் கடற்கரையை செவ்வாய்க்கிழமை மதியம் கடந்தது. தொடா்ந்து,இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகா்ந்து, மியான்மாருக்குள் நகா்ந்தது. மேலும், இது வலுவிழந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக நிலவியது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.