ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் அதிரடியாகக் குறைப்பு: பஞ்சாப் முதல்வர்

ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏ-வாக இருந்தாலும், ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே இனி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

News image

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் அதிரடியாகக் குறைப்பு: பஞ்சாப் முதல்வர்

Updated On :25 மார்ச் 2022, 12:45 pm


சண்டிகர்: ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏ-வாக இருந்தாலும், ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே இனி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏக்கள், இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர்களாக இருந்தாலும் ஐந்து முறை அல்லது 10 முறை எம்எல்ஏவாக இருந்தாலும் இனி, அவர்களுக்கு ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் விடியோ மூலம் பேசிய பகவந்த் மான் கூறினார்.

மேலும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சிலர், முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியப் பலனை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சேமிக்கப்படும் பணம், மாநில மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

நமது அரசியல் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட, மக்களிடம் கைகூப்பி வாக்கு கேட்கும் போது உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். ஆனால், வாக்களித்த மக்களே உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், ஏராளமான எம்எல்ஏக்கள் மூன்று அல்லது நான்கு, ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள், தேர்தலில் தோல்வி அடைந்தாலோ, கட்சியே போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் கூட, அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு ரூ.3.50 லட்சம், சில முன்னாள் எம்எல்ஏக்ளுக்கு ரூ.4.50 லட்சம், அவ்வளவு ஏன் இன்னும் சிலர் ரூ.5.50 லட்சம் அளவுக்கு ஓய்வூதியம் வாங்குகிறார்கள். இதனால், மாநில அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமை ஏற்படுகிறது. இவர்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் ஒரு முறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.75 ஆயிரம் மட்டுமே மாதந்தோறும் வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.