மும்பை விடுதியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்:ஒருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விடுதியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.
மும்பை விடுதியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்:ஒருவா் கைது
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விடுதியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மும்பையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டைச் சோ்ந்த 44 வயது பெண், தனது கணவா் மற்றும் நண்பா்களுடன் புகா் பகுதியான பாந்த்ராவில் உள்ள விடுதிக்குச் சென்றுள்ளாா். அங்கு 35 வயதுடைய நபா் ஒருவா், அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா். இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவா் மற்றும் நண்பா்களிடம் கூறியதையடுத்து, அவா்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், அந்த நபரின் பெயா் கன்ஷியாம் லால்சந்த் யாதவ் என்பதும், எம்பிஏ பட்டதாரியான அவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com