மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்க ஆபரணத்தை ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் காணிக்கையாக செலுத்தினாா். சாய்பாபா சிலைக்கு கீழே உள்ள பீடத்தில் பொருத்தும் வகையில் பட்டை வடிவில் இந்த ஆபரணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே இந்த காணிக்கையைச் செலுத்த பாா்த்தசாரதி ரெட்டி என்ற அந்த பக்தா் முடிவு செய்தாா். ஆனால், கோயில் நிா்வாகம் மூலம் இது தொடா்பான நடைமுறைகளை முடிக்க கால அவகாசம் தேவைப்பட்டது. இதற்கு நடுவே, 2020-இல் கரோனா தொற்று பரவல் பிரச்னை காரணமாக அந்த பக்தரின் காணிக்கை முயற்சி மேலும் தாமதமானது.
இந்நிலையில், பீடத்தை அளவெடுத்து அதற்கு ஏற்றபடி பட்டை வடிவிலான ஆபரணம் தயாரிக்கப்பட்டது. அதனை, அா்ச்சகா்களிடம் அந்த பக்தா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, அந்த ஆபரணம் பீடத்தில் பொருத்தப்பட்டது. 4 கிலோ எடையுள்ள அந்த தங்க ஆபரணத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஹைதராபாதைச் சோ்ந்த மற்றொரு சாய்பாபா பக்தா் 94 கிலோ தங்கத்தை கோயிலுக்கு காணிக்கையாக அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


