தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 பெண்கள் உள்பட 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 
தில்லி உயர் நீதிமன்றம்​
தில்லி உயர் நீதிமன்றம்​
Published on
Updated on
1 min read

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 பெண்கள் உள்பட 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக தாரா விட்டஸ்டா கஞ்சு, மினி புஷ்கர்ணா, மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா, விகாஸ் மகாஜன், துஷார் ராவ் கெடேலா, சச்சின் தத்தா, அமித் மகாஜன், கௌரங் காந்த் மற்றும் சௌரப் பெனார்ஜி ஆகியோருக்கு தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 9 வழக்குரைஞர்களின் பெயர்களை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பல வழக்குரைஞர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com