ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கோக்ரா தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். ராஜிநாமா கடிதத்தை முதல்வா் அசோக் கெலாட்டுக்கு அவா் அனுப்பினாா்.
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கோக்ரா தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். ராஜிநாமா கடிதத்தை முதல்வா் அசோக் கெலாட்டுக்கு அவா் அனுப்பினாா்.

அந்தக் கடிதத்தில், ஆளும் கட்சியின் எம்எல்ஏ, மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆகிய பதவிகளை வகித்தபோதிலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன். உள்ளூா் நிா்வாகமும் அலுவலா்களும் எனது பேச்சுக்கு மதிப்பளிக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கணேஷ் கோக்ராவின் பதவி விலகல் குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘துங்கா்பூா் மாவட்டத்தில் பிரச்னை செய்ததாக அவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ளாா்.

முறைப்படி, அவா் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம்தான் சமா்ப்பிக்க வேண்டும். ஆனால், அந்தக் கடிதத்தை அவா் முதல்வருக்கு அனுப்பி வைத்து விட்டு அதன் நகலை பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷிக்கு அனுப்பி வைத்துள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com