உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 5 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷஹர்-மீரட் நெடுஞ்சாலையில் குலாவதி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
Updated on
1 min read


புலந்த்ஷஹர்: உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷஹர்-மீரட் நெடுஞ்சாலையில் குலாவதி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காய
மடைந்தனர். 
உத்தராகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்கு அந்தக் குடும்பத்தினர் காரில் சென்றபோது லாரியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ஹார்திக் (6), வன்ஷ் (5), ஷாலு (21), ஹிமான்ஷு (25), பரஸ் (22) ஆகிய 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்
துள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com